மும்பை: சமூக ஊடகங்களில் சமூக - அரசியல் பிரச்னைகளை அவ்வப்போது எடுத்து கூறி, சர்ச்சைகளில் சிக்குபவர் பாலிவுட் நடிகை கங்கனா. இவர் அடிக்கடி தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை அவ்வப்போது நினைவு கூர்வார். இந்நிலையில் இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘எனது தந்தை என்னை உலகின் சிறந்த மருத்துவராக்க விரும்பினார். சிறந்த கல்வி நிறுவனத்தில் என்னை படிக்க வைக்க விரும்பினார். என்னை ஒரு மருத்துவராக்குதன் மூலம், புரட்சிகரமான தந்தையாக இருக்க வேண்டும் என்று கருதினார். ஆனால் நான் பள்ளிக்கு செல்ல மறுத்தேன். அதனால் அவர் என்னை கன்னத்தில் அறைந்தார்.
அப்போது நான் அவரது கையைப் பிடித்து, ‘நீங்கள் என்னை அறைந்தால், நானும் உங்களை அறைந்து விடுவேன்’ என்று சொன்னேன்’ என்று தெரிவித்துள்ளார். மற்றொரு டுவிட்டில், ‘என்னுடைய தந்தைக்கு உரிமம் பெற்ற துப்பாக்கி இருந்தது. அதனால், என்னை மிரட்டுவார். அப்போதெல்லாம் நான் நடுங்கினேன். ஆனால், நான் வளரவளர என்னை அவர் திட்டுவதை குறைத்துக் கொண்டார். எனது 15வது வயதில் அவருடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினேன். எனது 15வது வயதிலேயே எனது போராட்ட பயணம் தொடங்கியது’ என்று தெரிவித்துள்ளார்.